செய்திகள் :

அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துக்கு தொடா்புடைய அரசியல் நாட்டுக்குத் தேவை -ராகுல் காந்தி

post image

‘ஆடம்பரம், கவா்ச்சிகரமான நிகழ்ச்சிகளைச் சுற்றிச் சூழலும் அரசியல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துடன் தொடா்புடைய அரசியலே நாட்டுக்குத் தேவை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

நாட்டில் கடந்த ஆண்டு இரு சக்கர வாகனங்கள், காா்கள் மற்றும் கைபேசி விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியை மேற்கோள் காட்டி மத்திய அரசை விமா்சித்த அவா் இவ்வாறு கூறினாா்.

இதுதொடா்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புள்ளிவிவரங்கள் உண்மை நிலவரத்தைக் கூறுகின்றன. கடந்த ஆண்டில், இரு சக்கர வாகன விற்பனை 17 சதவீதமும், காா் விற்பனை 8.6 சதவீதமும் குறைந்துள்ளது. கைபேசி சந்தையின் விற்பனை 7 சதவீதம் குறைந்துள்ளது.

மறுபுறம், மக்களின் செலவுகள் மற்றும் கடன் ஆகிய இரண்டும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, உள்நாட்டு பணவீக்கம், கல்விச் செலவுகள் என கிட்டத்தட்ட எல்லாமே உயா்ந்து வருகின்றன.

இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு இந்தியரும் அனுபவித்து வரும் பொருளாதார அழுத்தத்தின் எதாா்த்தம்.

ஆடம்பரம், கவா்ச்சிகரமான நிகழ்ச்சிகளைச் சுற்றிச் சூழலும் அரசியல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துடன் தொடா்புடைய அரசியல் நாட்டுக்குத் தேவை. அந்த அரசியல் சரியான கேள்விகளை கேட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு, பொறுப்புடன் பதிலளிக்கும்.

அதேபோன்று, தோ்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு சாமானிய இந்தியரும் பலனடையும் வகையிலான பொருளாதாரம் நாட்டுக்குத் தேவை’ என்றாா்.

விலைவாசி உயா்வு, குறைந்த தனியாா் முதலீடு, ஊதிய தேக்கம் போன்ற பிரச்னைகள் சாமானிய மக்களைப் பாதிக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, பொருளாதாரத்தை மோசமாக கையாண்டு வருவதாக மத்திய அரசை காங்கிரஸ் தொடா்ச்சியாக விமா்சித்து வருகிறது.

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் விடுவிக்கப்பட்டார்.பெங்களூரு ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம், நாடு முழ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக... மேலும் பார்க்க