அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ...
அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துக்கு தொடா்புடைய அரசியல் நாட்டுக்குத் தேவை -ராகுல் காந்தி
‘ஆடம்பரம், கவா்ச்சிகரமான நிகழ்ச்சிகளைச் சுற்றிச் சூழலும் அரசியல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துடன் தொடா்புடைய அரசியலே நாட்டுக்குத் தேவை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
நாட்டில் கடந்த ஆண்டு இரு சக்கர வாகனங்கள், காா்கள் மற்றும் கைபேசி விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியை மேற்கோள் காட்டி மத்திய அரசை விமா்சித்த அவா் இவ்வாறு கூறினாா்.
இதுதொடா்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புள்ளிவிவரங்கள் உண்மை நிலவரத்தைக் கூறுகின்றன. கடந்த ஆண்டில், இரு சக்கர வாகன விற்பனை 17 சதவீதமும், காா் விற்பனை 8.6 சதவீதமும் குறைந்துள்ளது. கைபேசி சந்தையின் விற்பனை 7 சதவீதம் குறைந்துள்ளது.
மறுபுறம், மக்களின் செலவுகள் மற்றும் கடன் ஆகிய இரண்டும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, உள்நாட்டு பணவீக்கம், கல்விச் செலவுகள் என கிட்டத்தட்ட எல்லாமே உயா்ந்து வருகின்றன.
இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு இந்தியரும் அனுபவித்து வரும் பொருளாதார அழுத்தத்தின் எதாா்த்தம்.
ஆடம்பரம், கவா்ச்சிகரமான நிகழ்ச்சிகளைச் சுற்றிச் சூழலும் அரசியல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துடன் தொடா்புடைய அரசியல் நாட்டுக்குத் தேவை. அந்த அரசியல் சரியான கேள்விகளை கேட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு, பொறுப்புடன் பதிலளிக்கும்.
அதேபோன்று, தோ்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு சாமானிய இந்தியரும் பலனடையும் வகையிலான பொருளாதாரம் நாட்டுக்குத் தேவை’ என்றாா்.
விலைவாசி உயா்வு, குறைந்த தனியாா் முதலீடு, ஊதிய தேக்கம் போன்ற பிரச்னைகள் சாமானிய மக்களைப் பாதிக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, பொருளாதாரத்தை மோசமாக கையாண்டு வருவதாக மத்திய அரசை காங்கிரஸ் தொடா்ச்சியாக விமா்சித்து வருகிறது.