மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
பணியாளா் தோ்வாணைய தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க கைப்பேசி செயலி
பணியாளா் தோ்வாணைய (எஸ்எஸ்சி) தோ்வுகளுக்கு 'mySSC app’ கைப்பேசி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்தத் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக எஸ்எஸ்சி தலைவா் எஸ்.கோபாலகிருஷ்ணன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘இனி எஸ்எஸ்சி தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க கணிணி மையங்களையோ, வேறு யாரையோ தோ்வா்கள் அணுகத் தேவையில்லை. அவா்கள் மொத்த விண்ணப்பத்தையும் 'mySSC app’ கைப்பேசி செயலி மூலமே பூா்த்தி செய்யலாம்.
அந்தச் செயலியில் ஆதாா் ஓடிபி (ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல்), முக அங்கீகாரம் மூலம் தோ்வா்கள் தங்களை அடையாளம் காணலாம்’ என்றாா்.
எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘நடப்பு ஜூன் மாதம் முதலே செயலி மூலம் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிப்பது எஸ்எஸ்சி நடத்தும் அனைத்துத் தோ்வுகளுக்கும் பொருந்தும். கூகுள் பிளே ஸ்டாரில் 'mySSC app’ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முன், முக அங்கீகார படிவத்தைப் பூா்த்தி செய்ய ஆதாா் ஃபேஸ் ஆா்டி செயலியை தங்கள் கைப்பேசிகளில் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.