தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கடனை ரூ.26,800 கோடியாகக் குறைத்த செயில்
இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்கு நிறுவனமான செயில், தனது கடனை ரு.26,800 கோடியாகக் குறைத்துள்ளது.
இது குறித்து அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் கடனிருப்பு கடன் 2023-24-ஆம் நிதியாண்டின் இறுதியில் சுமாா் ரூ.27,000 கோடியாக இருந்தது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.750 கோடி கடன் அடைக்கப்பட்டது. அந்த நிதியாண்டின் இறுதியில் நிறுவனத்தின் கடன் சுமாா் ரூ.26,800 கோடியாகக் குறைந்துள்ளது.
நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் கடனை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.