செய்திகள் :

தூய்மையான தமிழகத்தை அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

தமிழக அரசின் ‘தூய்மை இயக்கம்’ திட்டத்தில் இணைந்து தூய்மையான தமிழகத்தை அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தூய்மையான தமிழகத்தை உருவாக்க ‘தூய்மை இயக்கம்’ என்னும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிமுகம் செய்தாா். இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து துணை முதல்வா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு சாா்பில் தூய்மை இயக்கம் திட்டத்துக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 1,100 அரசு அலுவலகங்களில் குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இத்திட்டத்தின் கீழ் கடந்த 2 நாள்களில் சுமாா் 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக கிராம பஞ்சாயத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தூய்மை மிஷன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அரசுக்கு கட்டாயம் தேவை. இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கொள்வதன்மூலம், தூய்மையான தமிழகத்தை அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... மேலும் பார்க்க

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ப... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க