கச்சேரிகளுக்கு பொழுதுபோக்கு வரி 10%: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை வேண்டுமா?: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: 10 + 2 Technical Entry Scheme 2025 (54th Course)
காலியிடங்கள்: 90
சம்பளம்: மாதம் ரூ.56,100- 1,77,500
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகள் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.2006-க்கும் 1.7.2009-க்கும் இடைப்பட்ட தேதியில் (இரண்டு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: 15 நிமிடத்திற்குள் 2.4 கி.மீ. தூரம் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்ஸ்-20. சிட்அப்ஸ்- 20, சினப்ஸ் - 8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீ தூரம் ஏற வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தில் வேலை:டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2025-இல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு ஆண்டு, ராணுவ தொழில்நுட்ப பயிற்சி 3 ஆண்டுகள் வழங்கப்படும். ராணுவ அதிகாரிக்கான பயிற்சி ஒரு ஆண்டு வழங்கப்படும். 5 ஆண்டுகள் பயிற்சி முடிந்தபின் ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியமர்த்தப்படுவர். பயிற்சி ஜனவரி 2026-இல் ஆரம்பமாகும்.
எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வானது இரண்டு நிலை-I மற்றும் நிலை-II கட்டங்களாக நடைபெறும். நிலை-I தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடை பெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நிலை-II இல் உடற்தகுதித்பிடங்கதேர்வு, மருத்துவத்தகுதித் தேர்வு நடைபெறும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: அலகாபாத், போபால் (எம்பி), பெங்களூரு (கர்நாடகம்), கபுர்தலா (பஞ்சாப்).
விண்ணப்பிக்கும் முறை: www.join indianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் போது கல்வி சான்றிதழ், வயதுவரம்பு சான்றிதழ், ஜேஇஇ முதன்மைத் தேர்வு-2025 மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.6.2025.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.