செய்திகள் :

ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை வேண்டுமா?: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

post image

இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: 10 + 2 Technical Entry Scheme 2025 (54th Course)

காலியிடங்கள்: 90

சம்பளம்: மாதம் ரூ.56,100- 1,77,500

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகள் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.2006-க்கும் 1.7.2009-க்கும் இடைப்பட்ட தேதியில் (இரண்டு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: 15 நிமிடத்திற்குள் 2.4 கி.மீ. தூரம் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்ஸ்-20. சிட்அப்ஸ்- 20, சினப்ஸ் - 8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீ தூரம் ஏற வேண்டும்.

என்எல்சி நிறுவனத்தில் வேலை:டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2025-இல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு ஆண்டு, ராணுவ தொழில்நுட்ப பயிற்சி 3 ஆண்டுகள் வழங்கப்படும். ராணுவ அதிகாரிக்கான பயிற்சி ஒரு ஆண்டு வழங்கப்படும். 5 ஆண்டுகள் பயிற்சி முடிந்தபின் ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியமர்த்தப்படுவர். பயிற்சி ஜனவரி 2026-இல் ஆரம்பமாகும்.

எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வானது இரண்டு நிலை-I மற்றும் நிலை-II கட்டங்களாக நடைபெறும். நிலை-I தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடை பெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நிலை-II இல் உடற்தகுதித்பிடங்கதேர்வு, மருத்துவத்தகுதித் தேர்வு நடைபெறும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: அலகாபாத், போபால் (எம்பி), பெங்களூரு (கர்நாடகம்), கபுர்தலா (பஞ்சாப்).

விண்ணப்பிக்கும் முறை: www.join indianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் போது கல்வி சான்றிதழ், வயதுவரம்பு சான்றிதழ், ஜேஇஇ முதன்மைத் தேர்வு-2025 மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.6.2025.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு கப்பல் கட்டும் தளம் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம். இது முதன்மையாக இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், தேனி, உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக... மேலும் பார்க்க

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

காரைக்குடியில் செயல்பட்டுவரும் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.PS-04/2025பணி: Project Associ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.: HPBP/FTA/01/2025பணி: Quality E... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை!

பொதுத்துறை நிறுவனமான பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி்... மேலும் பார்க்க