செய்திகள் :

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலையும் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை மற்றும் மாலை என இரு முறை தங்கத்தின் விலை உயர்ந்தது. மொத்தமாக ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் ஒரு கிராம் ரூ. 9,060-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 72,640 -க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று காலையும் சவரனுக்குர் ரூ. 80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9,090 ஆகவும் சவரன் ரூ. 72,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நீண்ட நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை, நேற்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்த நிலையில், இன்றும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 114 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,14,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்த... மேலும் பார்க்க

கடனை ரூ.26,800 கோடியாகக் குறைத்த செயில்

இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்கு நிறுவனமான செயில், தனது கடனை ரு.26,800 கோடியாகக் குறைத்துள்ளது. இது குறித்து அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

நமது நிருபா் கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய ப... மேலும் பார்க்க