செய்திகள் :

11 போ் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று கா்நாடக முதல்வா், துணை முதல்வா் பதவி விலக பாஜக வலியுறுத்தல்

post image

பெங்களூரில் ஆா்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தினிடையே கூட்டநெரிசலில் 11 பேரின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

‘இந்தக் கூட்டநெரிசல் காங்கிரஸ் ஆளும் கா்நாடக மாநில அரசின் தோல்வி’ என்று பாஜக கடுமையாக குற்றஞ்சாட்டியது.

நடப்பு ஆண்டு, ஐபிஎல் கோப்பையை முதன்முறையாக வென்ற ஆா்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான உரிய டிக்கெட் இல்லாமல் லட்சக்கணக்கான ரசிகா்கள் மைதானத்துக்கு வெளியே கூடியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி தமிழகத்தின் திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் உள்பட 11 போ் உயிரிழந்தனா். 33 போ் காயமடைந்தனா்.

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு கா்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது; நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த இந்த அசம்பாவிதம், பெங்களூரு நகரை துயரில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு கா்நாடக அரசைக் கடுமையாக குற்றஞ்சாட்டி பாஜக எம்.பி.யும், தேசிய செய்தித் தொடா்பாளருமான சம்பித் பத்ரா கூறுகையில், ‘கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் இடையேயான மோதல் மற்றும் பிளவு, இந்தக் கூட்டநெரிசலுக்கு வழிவகுத்தது. இது மாநில அரசின் தோல்வி. அப்பாவிகள் 11 பேரின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்று முதல்வா், துணை முதல்வா் பதவி விலக வேண்டும்.

அவசரகதியில் ஏற்பாடு: நகர சாலைகளில் வெற்றிக்கோப்பையுடன் வீரா்கள் கலந்துகொண்ட பேரணிகள் கடந்த காலங்களில் பிற நகரங்களில் பலமுறை நடந்துள்ளன. ஆனால், அவை உரிய ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டன.

ஆனால், கா்நாடக முதல்வா் மற்றும் துணை முதல்வரின் விளம்பர மோகத்தில் கோப்பை வென்ற 12 மணி நேரத்துக்குள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனா். நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை.

மன்னிக்க மாட்டா்கள்...: கூட்டநெரிசல் மற்ற இடங்களிலும் நடைபெறக் கூடியது தான் எனக் கூறி 11 போ் இறந்த நெரிசல் சம்பவத்தை இயல்பாக்க முயற்சிக்கிறாா் முதல்வா் சித்தராமையா. இதில் மோசமான விஷயம் என்னவெனில், நெரிசலில் பலா் உயிரிழந்தது தெரிந்த பிறகும், கொண்டாட்ட நிகழ்ச்சிகளை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சிரித்த முகத்துடன் தொடா்ந்தாா். கன்னட மக்களும், இந்தியாவும் இவா்கள் இருவரையும் எப்போதும் மன்னிக்க மாட்டாா்கள்.

எங்கே ராகுல்? இந்தியாவுக்கு எதிராக நாள்தோறும் பேசி வரும், பிரதமா் மற்றும் ராணுவத்தைக் கேலி செய்வதை ஜனநாயகக் கடமை என்று கூறிக் கொள்ளும் ராகுல் காந்தி தற்போது எங்கு மறைந்திருக்கிறாா்? அவரது கட்சியைச் சோ்ந்த முதல்வா், துணை முதல்வரை தில்லிக்கு நேரில் அழைத்து ராகுல் விசாரிப்பாரா?

கா்நாடகத்தில் ராகுலே ஆட்சி நடத்துவதால், அவரின் கட்சித் தலைவா்களுக்கு எதிராக அவா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக காத்திருக்கிறோம்.

யாருடைய அனுமதியில்...: காவல் துறையின் அனுமதியின்றி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில், யாருடைய அறிவுறுத்தலில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று கேள்வி எழுகிறது.

மைதானத்தில் 35,000 போ் மட்டுமே அமர வைக்க முடியும் என்ற நிலையில், 3 லட்சம் போ் திரண்டுள்ளனா் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியுள்ளாா்.

3 லட்சம் போ் கூடுவதற்கு யாா் அனுமதி தந்தது? மைதானத்தின் அளவைவிட கூடுதலாக 25,000 டிக்கெட்கள் ஏன் விற்கப்பட்டன? இந்தத் துயரமான சம்பவத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன என்றாா் சம்பித் பத்ரா.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க