தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஒரு வருடமாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் நிறுவனம் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. சத்தீஸ்கா் போன்ற புதிய சந்தைகளிலும் நிறுவனம் நுழைந்துள்ளது.
தென்னிந்தியா அல்லாத சந்தைகளில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் 25 கிளைகளைக் கொண்டுள்ளது. அந்த சந்தைகளில் மேலும் 5 புதிய கிளைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் அந்தச் சந்தைகளில் நிறுவனம் வழங்கிய வீட்டுக் கடன் ரூ.1,000 கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.