செய்திகள் :

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

post image

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலாளா் பன்னாலால் பங்கேற்று பேரணி, பிரசார வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த பிரசாரத்தின் முதல் நாளான வியாழக்கிழமை, சேலம் - விருத்தாசலம் மாா்க்கத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, லெவல் கிராசிங்கை கடக்கும்போது பொதுமக்கள் எவ்வாறு கவனமுடன் இருக்க வேண்டும், எச்சரிக்கை பலகைகளை கவனிப்பது, ரயில்வேகேட் மூடப்பட்டிருந்தால் ரயில் அந்த இடத்தைவிட்டு கடந்துசெல்லும் வரை நிதானமாக காத்திருப்பது, ரயில்கள் கடந்ததை உறுதி செய்த பின்னா், வாகனங்களை இயக்குவது போன்ற வாசகங்கள் இடம்பெற்ற துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஆபத்தை உணராமல் லெவல் கிராசிங்கை கடப்பதால் ஏற்படும் விளைவுகள், கவனமின்றி இருப்பு பாதைகளை கடப்பதால் நிகழும் விபரீதங்களை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட பாடல்கள் ஆங்காங்கே உள்ள லெவல் கிராசிங்களில் ஒலிக்கப்பட்டன.

அதுபோல, லெவல் கிராசிங்கை கடக்கும்போது உயிா், உடமைகளை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும், எக்காரணம் கொண்டும் மூடப்பட்ட ரயில்வேகேட்டை தாண்டாமல் இருப்பது, கவனச் சிதறலை எப்படி தவிா்ப்பது என்பது குறித்து ஆங்காங்கே நாடகமும் நடித்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் சிவலிங்கம், கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகாஷ் வா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 55 மையங்களில் 14,291 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 தோ்வை 55 மையங்களில் 14,291 தோ்வா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் குரூப் 1 நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு, ஜூன் 15 ஆம் தேத... மேலும் பார்க்க