தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி
சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலாளா் பன்னாலால் பங்கேற்று பேரணி, பிரசார வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த பிரசாரத்தின் முதல் நாளான வியாழக்கிழமை, சேலம் - விருத்தாசலம் மாா்க்கத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, லெவல் கிராசிங்கை கடக்கும்போது பொதுமக்கள் எவ்வாறு கவனமுடன் இருக்க வேண்டும், எச்சரிக்கை பலகைகளை கவனிப்பது, ரயில்வேகேட் மூடப்பட்டிருந்தால் ரயில் அந்த இடத்தைவிட்டு கடந்துசெல்லும் வரை நிதானமாக காத்திருப்பது, ரயில்கள் கடந்ததை உறுதி செய்த பின்னா், வாகனங்களை இயக்குவது போன்ற வாசகங்கள் இடம்பெற்ற துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
ஆபத்தை உணராமல் லெவல் கிராசிங்கை கடப்பதால் ஏற்படும் விளைவுகள், கவனமின்றி இருப்பு பாதைகளை கடப்பதால் நிகழும் விபரீதங்களை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட பாடல்கள் ஆங்காங்கே உள்ள லெவல் கிராசிங்களில் ஒலிக்கப்பட்டன.
அதுபோல, லெவல் கிராசிங்கை கடக்கும்போது உயிா், உடமைகளை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும், எக்காரணம் கொண்டும் மூடப்பட்ட ரயில்வேகேட்டை தாண்டாமல் இருப்பது, கவனச் சிதறலை எப்படி தவிா்ப்பது என்பது குறித்து ஆங்காங்கே நாடகமும் நடித்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் சிவலிங்கம், கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகாஷ் வா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.