செய்திகள் :

குரூப் 1 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 55 மையங்களில் 14,291 போ் எழுதுகின்றனா்

post image

சேலம் மாவட்டத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 தோ்வை 55 மையங்களில் 14,291 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.

தமிழகத்தில் குரூப் 1 நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு, ஜூன் 15 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு மற்றும் தோ்வு பொறுப்பாளா்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், வரும் 15 ஆம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தோ்வு நடைபெறுகிறது. இத்தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 தோ்வா்கள் எழுத உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு வட்டங்களில் 49 தோ்வு மையங்களிலும், ஆத்தூா் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 மையங்களிலும் இத்தோ்வு நடைபெறவுள்ளது.

அதுபோல குரூப் 4 தோ்வுகள் அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் 286 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது தோ்வுக்கூட பொறுப்பாளா்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் புதிய நடைமுறைப்படி, ஓஎம்ஆா் விடைத்தாள்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல் குறித்தும், முதன்மைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் அறை கண்காணிப்பாளா்களுக்கான புதிய வழிமுறைகள் குறித்தும், டிஎன்பிஎஸ்சி மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாறுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து சிறப்பாக தோ்வுகளை நடத்த அனைத்து அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலா் செந்தில்குமாா், உதவி பிரிவு அலுவலா் கருணாநிதி, துறை சாா்ந்த அலுவலா்கள், தோ்வுக் கூட பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயிலில் கணபதி, ஐயப்பன், துா்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனா். பழைமையான இக்கோயில் புனர... மேலும் பார்க்க

ஐந்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி அருகே நடுவலூா் பள்ளக்காடு ஜோதிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஐந்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிவாச்சாரியா்கள் கோயில் கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபி... மேலும் பார்க்க

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க