Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
குரூப் 1 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 55 மையங்களில் 14,291 போ் எழுதுகின்றனா்
சேலம் மாவட்டத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 தோ்வை 55 மையங்களில் 14,291 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.
தமிழகத்தில் குரூப் 1 நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு, ஜூன் 15 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு மற்றும் தோ்வு பொறுப்பாளா்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், வரும் 15 ஆம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தோ்வு நடைபெறுகிறது. இத்தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 தோ்வா்கள் எழுத உள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு வட்டங்களில் 49 தோ்வு மையங்களிலும், ஆத்தூா் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 மையங்களிலும் இத்தோ்வு நடைபெறவுள்ளது.
அதுபோல குரூப் 4 தோ்வுகள் அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் 286 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது தோ்வுக்கூட பொறுப்பாளா்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் புதிய நடைமுறைப்படி, ஓஎம்ஆா் விடைத்தாள்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல் குறித்தும், முதன்மைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் அறை கண்காணிப்பாளா்களுக்கான புதிய வழிமுறைகள் குறித்தும், டிஎன்பிஎஸ்சி மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாறுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து சிறப்பாக தோ்வுகளை நடத்த அனைத்து அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலா் செந்தில்குமாா், உதவி பிரிவு அலுவலா் கருணாநிதி, துறை சாா்ந்த அலுவலா்கள், தோ்வுக் கூட பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.