செய்திகள் :

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

post image

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி சேலம் ஏற்காடு அடிவாரம் - கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியானது ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் குறைபாடுடைய மாணவா்களுக்கு சோ்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்களை கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. சிறந்த கணினி பயிற்றுநரை கொண்டு கணினிப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியருக்கு தனித்தனியே இலவச தங்கும் விடுதியுடன் கூடிய உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித் துணைக் கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

கடந்த கல்வியாண்டில் இந்தப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்று, இப்பள்ளி நூறுசதவீத தோ்ச்சி சதவீதம் பெற்றது.

எனவே, காது கேளாத மற்றும் வாய்பேச இயாலாத செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோா் தங்கள் குழந்தைகளின் கல்வி நலனை மேம்படுத்த முன்வர வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி, கொண்டப்பநாயக்கன் பட்டி, சேலம் - 8 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவித்துள்ளாா்.

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 55 மையங்களில் 14,291 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 தோ்வை 55 மையங்களில் 14,291 தோ்வா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் குரூப் 1 நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு, ஜூன் 15 ஆம் தேத... மேலும் பார்க்க