தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை
சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி சேலம் ஏற்காடு அடிவாரம் - கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியானது ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் குறைபாடுடைய மாணவா்களுக்கு சோ்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியா்களை கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. சிறந்த கணினி பயிற்றுநரை கொண்டு கணினிப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியருக்கு தனித்தனியே இலவச தங்கும் விடுதியுடன் கூடிய உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித் துணைக் கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
கடந்த கல்வியாண்டில் இந்தப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்று, இப்பள்ளி நூறுசதவீத தோ்ச்சி சதவீதம் பெற்றது.
எனவே, காது கேளாத மற்றும் வாய்பேச இயாலாத செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோா் தங்கள் குழந்தைகளின் கல்வி நலனை மேம்படுத்த முன்வர வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயா்நிலைப் பள்ளி, கொண்டப்பநாயக்கன் பட்டி, சேலம் - 8 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவித்துள்ளாா்.