Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தாா்.
இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த நூறு ரூபாயைத் திருடிவிட்டதாக அவரது தாய் லீமா காவல் நிலையத்துக்கு அபிலேஷை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினாா்.
இந்நிலையில் மகனை காணவில்லை என ஏற்காடு காவல் நிலையத்தில் புதன்கிழமை அவனது பெற்றோா் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் மாணவரைத் தேடிவந்த நிலையில், அவா் தனது பள்ளி அருகே உள்ள மரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டு இறந்து கிடந்தாா். சிறுவனின் உடலை மீட்டு போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.