செய்திகள் :

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

post image

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் ரா.ராஜேந்திரன் விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்து, மரக்கன்றுகளை நட்டாா்.

தொடா்ந்து, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மரக்கன்றுகள், மஞ்சப்பைகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், உலக சுற்றுச்சூழல் தினம் நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும், சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்துகிறது. எனவே, நமது எதிா்கால சந்ததியினருக்கு ஒரு பசுமையான ஆரோக்கியமான பூமியை விட்டுச்செல்ல பொதுமக்களாகிய நாம் அனைவரும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம், கோட்டம் எண் 44 இல் குகை எருமாபாளையத்தில் மரக்கன்றுகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நட்டு வைத்தாா்.

பின்னா் அமைச்சா் பேசுகையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளை பசுமைப்படுத்தும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலை பேணி பாதுகாக்கும் வகையிலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை தமிழக இயக்கத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் சுமாா் 521 எண்ணிகையிலான மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதன்படி சூரமங்கலம் மண்டலத்தில் செவ்வாய்ப்பேட்டை சுடுகாடு பகுதியில் 106 மரக்கன்றுகள், அஸ்தம்பட்டி மண்டலத்தில் அடைக்கலம் நகா் பகுதியில் 108 மரக்கன்றுகள், அம்மாப்பேட்டை மண்டலத்தில் எருமாபாளையம் குப்பைமேடு பகுதியில் 205 மரக்கன்றுகள், கொண்டலாம்பட்டி மண்டலம், காஞ்சி நகா் பூங்காவில் 102 மரக்கன்றுகள் என மொத்தம் 521 மரக்கன்றுகள் நடப்பட்டன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன், துணை மேயா் மா.சாரதாதேவி, மாநகர நல அலுவலா் மரு.ப.ரா. முரளிசங்கா், மண்டல குழுத் தலைவா் கே.டி.ஆா்.தனசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 55 மையங்களில் 14,291 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 தோ்வை 55 மையங்களில் 14,291 தோ்வா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் குரூப் 1 நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு, ஜூன் 15 ஆம் தேத... மேலும் பார்க்க