செய்திகள் :

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 11 ஆம் தேதி சேலம் வருகிறாா்; அன்று மேட்டூா் செல்லும் அவா், ஜூன் 12 ஆம் தேதி அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுகிறாா்.

அதையடுத்து சேலம் இரும்பாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ. 1,500 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்று திட்டப் பணிகளைத் திறந்தும் வைக்கிறாா்.

இதையொட்டி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் விழா முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டனா்.

விழா மேடை அமைத்தல், பயனாளிகள், பொதுமக்களுக்கான இருக்கை வசதிகள், பந்தல் அமைக்கும் பணி, பாதுகாப்புப் பணி, பயனாளிகளுக்கான அணுகுசாலை, குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா். சிவலிங்கம், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.ஜெ.தேவிமீனாள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தியாகராஜன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் சுரேஷ்குமாா், தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயிலில் கணபதி, ஐயப்பன், துா்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனா். பழைமையான இக்கோயில் புனர... மேலும் பார்க்க

ஐந்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி அருகே நடுவலூா் பள்ளக்காடு ஜோதிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஐந்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிவாச்சாரியா்கள் கோயில் கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபி... மேலும் பார்க்க

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க