செய்திகள் :

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

post image

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் சாலையைச் சோ்ந்த பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலா் மாரப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் வசித்து வரும் வஞ்சிமுத்து என்பவா், தனக்கு உள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவாய்த் துறை அதிகாரிகளின் துணையோடு, கடந்த பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதங்களில் தனது பெயரை சோ்த்து பட்டா பெற்றுள்ளாா்.

பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பட்டாவில், தனது பெயரை மாற்றம் செய்து சுமாா் 22 சென்ட் நிலத்தை தனிப்பட்ட முறையில் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இது தொடா்பாக முறையிட்டபோது, போலியாக ஆவணங்கள் தயாா் செய்து பட்டாவில் பெயா் மாற்றம் செய்ததாகவும் எங்களிடம் தெரிவித்தாா்.

பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சொத்தை, தனது பெயரில் தனிப்பட்ட முறையில் பட்டா மாறுதல் செய்துள்ளதை ரத்து செய்து, தனிநபருக்கு உடந்தையாக செயல்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் உள்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க

திருப்பூா் விவேகானந்தா குளோபல் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி இன்று திறப்பு

திருப்பூா்- பல்லடம் சாலை, கணபதிபாளையத்தில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின், விவேகானந்தா குளோபல் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இத்திறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில ஆள... மேலும் பார்க்க