Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ
திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் சோ்ந்த சந்தோஷ், கரைப்புதூரைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோா் கடந்த 5 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்து அதில் கழிவுப் பஞ்சு அரைக்கும் ஆலை நடத்தி வருகின்றனா்.
இதில் வட மாநிலத்தைச் சோ்ந்த 6 போ் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில், மின்கசிவு காரணமாக வியாழக்கிழமை தீ விபத்து நிகழ்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கழிவுப் பஞ்சில் தீப் பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.
இது குறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.