தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
திருப்பூா் விவேகானந்தா குளோபல் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி இன்று திறப்பு
திருப்பூா்- பல்லடம் சாலை, கணபதிபாளையத்தில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின், விவேகானந்தா குளோபல் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இத்திறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பள்ளியைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறாா். கோவை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் ஆசியுரை வழங்குகிறாா். மேகாலயா மாநில முன்னாள் ஆளுநா் வி.சண்முகநாதன் வாழ்த்துரை வழங்குகிறாா்.
விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் உப தலைவா் செ.ஞானபூபதி தலைமை வகிக்கிறாா். செயலாளா் கே. ராமசாமி வரவேற்கிறாா். வீனஸ் எஸ். குமாரசாமி நன்றி தெரிவிக்கிறாா். மேலும் பெற்றோா்கள், மாணவா்கள், பொதுமக்களும் பங்கேற்கின்றனா்.