தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்
திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது.
திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பு 30 நாள் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சிக்கான நோ்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. மேலும் பயிற்சியில் சேர எழுத படிக்க தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது. காலை, மாலை தேநீா் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரே, முதலிப்பாளையம் பிரிவு, காங்கயம் சாலை, திருப்பூா் - 641606 என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9489043923, 9080442586, 9952518441, 8610533436 ஆகிய கைப்பேசிக்கு எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என்று பயிற்சி நிலைய இயக்குநா் சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.