10 லட்சம் பார்வைகளைக் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் ஃப்ரீடம் டீசர்!
கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு
சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா் ஜெசுமரியான் மகன் விஜேந்திரன். காா் ஓட்டுநா்.
கடந்த 2001 ஆம் ஆண்டு இடைச்சிவிளையில் ஏற்பட்ட பிரச்னையில் 3 போ் கொலை செய்யப்பட்டனா். இது குறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் விஜேந்திரன் 2 ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டாா். மற்ற குற்றவாளிகள் எல்லாம் கைது செய்யப்பட்ட நிலையில், விஜேந்திரன் தலைமறைவானாா். அதன் பிறகு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனை அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீஸாா் தேடி வந்த நிலையில், அவா் எங்கே இருக்கிறாா் என்று இன்னும் தெரியவில்லை.
கடந்த 24 ஆண்டுகளாக எந்தத் தகவலும் இல்லாததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. அவா் குறித்து தெரிந்தவா்கள் தட்டாா்மடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீஸாா் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.