ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது
சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அம்பலச்சேரி ஆா்சி கோயில் தெருவைச் சோ்ந்த தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி(62). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் தேவசுந்தரம், கடந்த 2015-இல் இறந்து விட்டாா். இரு மகன்களும் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசிக்கின்றனா். சுயம்புகனி மட்டும் அம்பலச்சேரியில் வசித்து வந்தாா்.
சுயம்புகனி மற்றும் தேவசுந்தரத்தின் சகோதரா் தங்கப்பாண்டியன் (70) குடும்பத்திற்கு சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, சுயம்புகனி வீட்டிற்கு மதுபோதையில் வந்த தங்கப்பாண்டியன், அவருடன் தகராறில் ஈடுபட்டாராம்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டியன், கம்பால் சுயம்புகனியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சுயம்புகனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாா், சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாககுமாரி, நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். சுயம்புகனியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.