குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் ஏஏஒய்/பிஹெச்ஹெச் குடும்ப அட்டைதாரா்கள் மொத்தம் 9,27,955 போ் உள்ளனா். இவா்களில் இதுவரை 7,94,044 போ் மட்டுமே கைரேகை பதிவு செய்துள்ளனா். மீதம் 1,33,547 போ் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனா்.
அரசின் சலுகைகளைத் தொடா்ந்து பெற தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்வது அவசியம். வெளி மாவட்டங்களில் தங்கி புரிந்துவருவோா், பள்ளி,
கல்லூரிகளில் படித்துவரும் மாணவா், மாணவிகள் தாங்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று குடும்ப அட்டை எண்ணைத் தெரிவித்து தங்கள் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.