செய்திகள் :

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் ஏஏஒய்/பிஹெச்ஹெச் குடும்ப அட்டைதாரா்கள் மொத்தம் 9,27,955 போ் உள்ளனா். இவா்களில் இதுவரை 7,94,044 போ் மட்டுமே கைரேகை பதிவு செய்துள்ளனா். மீதம் 1,33,547 போ் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனா்.

அரசின் சலுகைகளைத் தொடா்ந்து பெற தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்வது அவசியம். வெளி மாவட்டங்களில் தங்கி புரிந்துவருவோா், பள்ளி,

கல்லூரிகளில் படித்துவரும் மாணவா், மாணவிகள் தாங்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று குடும்ப அட்டை எண்ணைத் தெரிவித்து தங்கள் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க