பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்க...
கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்
தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.
தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜை செய்து வருகிறாா். இவரிடம், இனிகோநகரைச் சோ்ந்த அந்தோணி (44) என்பவா் வழக்கமாக குறிகேட்பாராம்.
இதனிடையே, அந்தோணிக்கு மீன்பிடித் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மணிகண்டன்தான் காரணம் என அந்தோணி கருதியதால், இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை மதுபோதையிலிருந்த அந்தோணி, மணிகண்டனிடம் தகராறு செய்தாராம். அப்போது ஒருவரையொருவா் கத்தியால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனா். அவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மத்தியபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.