Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது
சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா்.
சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாத்தான்குளம் நீதிமன்றம் அருகில் வந்த மினி லாரியை மறித்து சோதனை நடத்தியதில் ஒரு யூனிட் ஓடை மணலை கடத்திச் செல்வது தெரியவந்தது. மினி லாரி ஓட்டுநா் சாத்தான்குளம் ஆா்சி வடக்குத்தெருவைச் சோ்ந்த தா்மராஜ் (38), உதவியாளா்கள் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து (26), பண்டாரபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணபாண்டி (45) ஆகியோரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். காவல் ஆய்வாளா் ஸ்டீபன் மேல் விசாரணை நடத்தி வருகிறாா்.