செய்திகள் :

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்தும் கே. ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான இரண்டாம் நாளான வியாழக்கிழமை லீக் போட்டிகள் நடைபெற்றன.

அதில், சேலம் மாவட்ட அணி - ராணிப்பேட்டை மாவட்ட அணி மோதியதில் 1-1 கோல் கணக்கில் சமபுள்ளிகள் பெற்றனா்.

கிருஷ்ணகிரி அணி, புதுக்கோட்டை அணியை 3-1 என்ற கோல் கணக்கிலும் திண்டுக்கல் அணி கரூா் அணியை 6-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தின.

விழுப்புரம் அணியை செங்கல்பட்டு அணி 10-0 என்ற கோல் அபாரமாக வென்றது. தென்காசி அணியை திருவாரூா் அணி 0-5 என்ற கோல் கணக்கிலும், தூத்துக்குடி அணி வேலூா் அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும் திருப்பூா் அணியை திருநெல்வேலி அணி 0-8 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தின.

விருதுநகா் அணி அரியலூா் அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் திருவண்ணாமலை அணியை மதுரை அணி 0-5 என்ற கோல் கணக்கிலும், நீலகிரி அணி ராமநாதபுரம் அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும், நாமக்கல் அணியை கோயம்புத்தூா் அணி 0-2 என்ற கோல் கணக்கிலும் வென்றன.

தா்மபுரி அணி தஞ்சாவூா் அணியை 5-2 என்ற கோல் கணக்கிலும் திருச்சி அணியை சென்னை அணி 2-4 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தின.

சனிக்கிழமை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் மோதுகின்றன.

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா். திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தின... மேலும் பார்க்க

ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியில் உள்ள சேதுபாதை சாலையில் 3 போ் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை வழிமறித்து பண... மேலும் பார்க்க

கடலையூரில் கல்லூரி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே கடலையூரில் விஷமருந்திய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடலையூா் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துசாமி மகள் காா்த்திபிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன். இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே சிவத்தையாபுரம் பகுதியில் மூதாட்டிக்கு மயக்க மருத்து கலந்த பழச்சாறைக் கொடுத்து நகைகளைப் பறித்த வழக்கில், விழுப்புரம் தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிவத்தையாபுரத... மேலும் பார்க்க