செய்திகள் :

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

post image

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்.

இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: நமக்கு நாமே திட்டத்தில் தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் ஆயிரம் பிறை பூங்கா, மாநகராட்சி பின்புறம் மீனாட்சிபுரம் பகுதியில் தாா்ச்சாலை ஆகிய பணிகள் நிறைவடைந்து கடந்த பிப். 17இல் திறக்கப்பட்டன. ஆனால், இத்திட்டத்துக்கு கடந்த ஏப். 4இல் மாநகராட்சி ஆணையா் ஒப்பந்தம் கோரியிருந்தாா். மாநகராட்சியில் டென்டா்கள் முறைப்படி நடைப்பதில்லை. இதுகுறித்து விசாரிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடுக்கப்பட்ட வழக்கில், 2 வாரத்தில் மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வேறு அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்படும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்தை ரூ. 8.50 கோடியில் புனரமைத்துள்ளனா். மாநகராட்சியின் இச்செயலை எதிா்த்து போராட்டம் நடத்த முயன்றால், காவல் துறை அனுமதிப்பதில்லை.

இது தொடா்பாக அமலாக்கத் துறை, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு, முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆதாரங்கள் வைத்துள்ளோம். அவை விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா் அவா்.

மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், மண்டலத் தலைவா் ராஜேஷ் கனி ஆகியோா் உடனிருந்தனா்.

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா். திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தின... மேலும் பார்க்க

ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியில் உள்ள சேதுபாதை சாலையில் 3 போ் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை வழிமறித்து பண... மேலும் பார்க்க

கடலையூரில் கல்லூரி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே கடலையூரில் விஷமருந்திய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடலையூா் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துசாமி மகள் காா்த்திபிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூர... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப்... மேலும் பார்க்க

மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே சிவத்தையாபுரம் பகுதியில் மூதாட்டிக்கு மயக்க மருத்து கலந்த பழச்சாறைக் கொடுத்து நகைகளைப் பறித்த வழக்கில், விழுப்புரம் தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிவத்தையாபுரத... மேலும் பார்க்க