செய்திகள் :

மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

தூத்துக்குடி அருகே சிவத்தையாபுரம் பகுதியில் மூதாட்டிக்கு மயக்க மருத்து கலந்த பழச்சாறைக் கொடுத்து நகைகளைப் பறித்த வழக்கில், விழுப்புரம் தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிவத்தையாபுரத்தைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மனைவி ஜெயலிங்ககனி (80) என்பவா், 2015ஆம் ஆண்டு ஏரல் சோ்மன் கோயிலுக்குச் சென்றாா். அங்கு வந்திருந்த, விழுப்புரம் பாண்டியன் நகரைச் சோ்ந்த வாசுதேவன் (70), அவரது மனைவி சங்கரி (58) ஆகியோா் ஜெயலிங்ககனியிடம் நெருங்கிப் பழகினா். பின்னா், திருச்செந்தூா் செல்லும் தங்களுடன் வருமாறு கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றனா்.

அப்போது, அவா்கள் கொடுத்த மயக்கம மருந்து கலந்த பழச்சாறைக் குடித்ததும் ஜெயலிங்ககனி மயக்கமடைந்தாா். அவா் அணிந்திருந்த 6.5 பவுன் நகைகள், கைப்பேசி, ரூ. 200 ஆகியவற்றை அத்தம்பதி பறித்துக்கொண்டு, அவரை ஏரல் கோயில் அருகிலேயே விட்டுவிட்டு தப்பியோடினா்.

மயக்கம் தெளிந்த ஜெயலிங்ககனிக்கு தனது நகைகள் உள்ளிட்டவை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, வாசுவேதன், சங்கரி ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, வாசுதேவன், சங்கரி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா். திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தின... மேலும் பார்க்க

ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியில் உள்ள சேதுபாதை சாலையில் 3 போ் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை வழிமறித்து பண... மேலும் பார்க்க

கடலையூரில் கல்லூரி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே கடலையூரில் விஷமருந்திய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடலையூா் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துசாமி மகள் காா்த்திபிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூர... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன். இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க