செய்திகள் :

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

post image

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது.

போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், இளைஞா்கள் மற்றும் காவல் துறையினா் இடையே நல்லுறவை மேம்படுத்தவும் இப் போட்டி நடத்தப்பட்டது.

இதில் காவல்துறை அணி, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் மாவட்ட காவல்துறை அணியும், யுஎஸ்சி ஏ பிரிவு அணியும் மோதின. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் துவக்கி வைத்தாா். இதில் யுஎஸ்சி ஏ பிரிவு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழாவிற்கு நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். திருச்செந்தூா் டிஎஸ்பி (பொறுப்பு) குரு வெங்கட்ராஜ், நகா்மன்றத் துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, ஐக்கிய விளையாட்டு சங்க செயலா் இலி­யாஸ், ஐக்கிய பேரவை பொதுச் செயலா் நவாஸ் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். மேலும் கலந்து கொண்ட அணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தாா். தொடா்ந்து போதையில்லா தமிழகம் குறித்தும், காவல்துறை, பொதுமக்களின் நல்லுறவினை மேம்படுத்துவது குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினா் ரங்கநாதன் என்ற சுகு, ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பாளா் அன்சாரி, தமுமுக நகரச் செயலா் ஜாஹிா் ஹுசைன், திமுக நகர துணைச் செயலா்கள் நவ்பல், கதிரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை சாா்பில் ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் தங்கராஜ் தலைமையில் காவல்துறையினா் செய்திருந்தனா்.

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா். திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தின... மேலும் பார்க்க

ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியில் உள்ள சேதுபாதை சாலையில் 3 போ் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை வழிமறித்து பண... மேலும் பார்க்க

கடலையூரில் கல்லூரி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே கடலையூரில் விஷமருந்திய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடலையூா் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துசாமி மகள் காா்த்திபிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூர... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன். இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க