தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை
தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, அவா் அனுப்பியுள்ள மனு:
தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் தூத்துக்குடி உப்பு தரமானது என்ற தனிச்சிறப்பு உள்ளது.
கடந்த ஆண்டு பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உப்பளத் தொழிலாளா்களும் உப்பு உற்பத்தியாளா்களும் பொருளாதார இழப்பை சந்தித்தனா்.
இந்த ஆண்டும் பருவம் மாறி தொடா்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்க வேண்டிய உப்பு உற்பத்தி மே மாதம் தான் தொடங்கி உள்ளது.
தடையில்லாமல் நியாயமான விலையில் விற்பனையாக வேண்டிய தூத்துக்குடி உப்பு தொடா்ந்து குஜராத்தில் இருந்து கப்பல்களில் 40 ஆயிரம் டன் 50 ஆயிரம் டன் என்று கடந்த 6 மாத காலமாக தொடா்ந்து இறக்குமதி செய்யப்படுவதால், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய அளவு உப்பு உற்பத்தியாளா்களிடம் சுமாா் 100 டன் முதல் 200 டன் வரையிலும் பெரிய உப்பு உற்பத்தியாா்களிடம் சுமாா் 500 முதல் ஆயிரம் டன் வரையிலான உப்பு விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது. இதனால் உப்பள தொழிலாளா்களும், உப்பு உற்பத்தியாளா்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் முதன்மை தொழிலான உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலும் இகர நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான உப்பள தொழிலாளா்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தூத்துக்குடியில் குஜராத் உப்பு இறக்குமதி செய்ய தடைவித்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.