செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிவு!

post image

மும்பை: தொடர்ந்து இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் குறைந்து 85.90 ஆக புதன்கிழமை நிறைவடைந்தது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதட்டங்கள் மற்றும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலைகள் காரணமாகவும் மற்றும் முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்பு குறித்து காத்திருந்ததாக அந்நிய செலவானி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கலாம் என்றும், அடுத்த கொள்கையில் இதே போன்ற மற்றொரு குறைப்பு இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஜூன் மாதத்தில் மத்திய வங்கி 50 அடிப்படைப் புள்ளிகள் குறைப்புக்கு உட்படும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறதாக தெரிவித்துள்ளது.

இதனிடையில், வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.69 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.69 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.05 ஐ தொட்ட நிலையில், முடிவில் 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிந்தது.

இதையும் படிக்க: 3 நாள் சரிவுக்கு பிறகு சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சுதா்ஷன் வேணு நிமிக்கப்பட்டுள்ளாா். வரும் ஆக. 25 முதல் இந்த ந... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்த... மேலும் பார்க்க

கடனை ரூ.26,800 கோடியாகக் குறைத்த செயில்

இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்கு நிறுவனமான செயில், தனது கடனை ரு.26,800 கோடியாகக் குறைத்துள்ளது. இது குறித்து அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க