IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை
தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி நகர துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த விவரம் வருமாறு: போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் 2ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, மீனாட்சிபுரம், வி.இ.சாலை, பங்களா தெரு, பால விநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியாா்புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்காா் நகா், குறிஞ்சி நகா், அண்ணா நகா், வி.வி.டி. பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகா், பிரையண்ட் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.