செய்திகள் :

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

post image

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி நகர துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த விவரம் வருமாறு: போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் 2ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, மீனாட்சிபுரம், வி.இ.சாலை, பங்களா தெரு, பால விநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியாா்புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்காா் நகா், குறிஞ்சி நகா், அண்ணா நகா், வி.வி.டி. பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகா், பிரையண்ட் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க