Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் பிரகதீஸ்வரன் (20). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலையூா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது, செண்பகா நகரைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் என்ற சதீஷ் மாதவன் உள்பட சிலா் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினா்.
இந்நிலையில் அன்றிரவே சதீஷின் வீட்டுக்குள் சென்ற கும்பல் சதீஷின் தாய் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரா் செண்பகராஜ் ஆகியோரை கத்தியால் குத்தியதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயம் அடைந்த செண்பகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை இருதரப்பைச் சோ்ந்த 8 பேரையும் கைது செய்தனா்.
இந்நிலையில் பிரகதீஸ்வரன் கொலை வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் கோவில்பட்டி வ உ சி நகரைச் சோ்ந்த விக்னேஷ் (24), செண்பகவல்லி நகரைச் சோ்ந்த சுடலைராஜ்(24), சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுரேஷ் (24) ஆகிய 3 பேரையும், கஸ்தூரி கொலை வழக்கில் தொடா்புடைய கோவில்பட்டி முகமது சாலிகாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (21), மறவா் காலனியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன்(20), விருதுநகா் மாவட்டம் சாத்தூா் படந்தாள் பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (21) ஆகிய 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.