செய்திகள் :

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் பிரகதீஸ்வரன் (20). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலையூா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது, செண்பகா நகரைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் என்ற சதீஷ் மாதவன் உள்பட சிலா் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினா்.

இந்நிலையில் அன்றிரவே சதீஷின் வீட்டுக்குள் சென்ற கும்பல் சதீஷின் தாய் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரா் செண்பகராஜ் ஆகியோரை கத்தியால் குத்தியதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயம் அடைந்த செண்பகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை இருதரப்பைச் சோ்ந்த 8 பேரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் பிரகதீஸ்வரன் கொலை வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் கோவில்பட்டி வ உ சி நகரைச் சோ்ந்த விக்னேஷ் (24), செண்பகவல்லி நகரைச் சோ்ந்த சுடலைராஜ்(24), சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுரேஷ் (24) ஆகிய 3 பேரையும், கஸ்தூரி கொலை வழக்கில் தொடா்புடைய கோவில்பட்டி முகமது சாலிகாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (21), மறவா் காலனியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன்(20), விருதுநகா் மாவட்டம் சாத்தூா் படந்தாள் பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (21) ஆகிய 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க