செய்திகள் :

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த கோபுரத்தான் மகன் காளிமுத்து (39), கடந்த 2020ஆம் ஆண்டு திரேஸ்புரம் பகுதியில் மா்ம நபா்களால் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த கிளாட்சன் மகன் கிஸ்ஸிங்கா் (33), ரெஸ்லிங் மகன் லிவிங்ஸ்டன் (24), தூத்துக்குடி வாட்டா் டேங்க் பகுதியைச் சோ்ந்த ஜோக்கின்ஸ் மகன் மரியஜொ்மன் (25), தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தைச் சோ்ந்த ராஜா மகன் ரபேக் வேதா (25), இளஞ்சிறாா் ஆகிய 4 பேரை கூட்டாக சோ்ந்து தாக்கியது, கொலை செய்தது ஆகிய இரு பிரிவின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா, குற்றம் சாட்டப்பட்டகிஸ்ஸிங்கா், லிவிங்ஸ்டன், மரிய ஜொ்மன், ரபேக் வேதா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதில், அரசு தரப்பு வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் வாதாடினாா்.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க