செய்திகள் :

1.48 லட்சம் பீர் பாக்ஸ்.. ஆர்சிபி வெற்றியால் ஒரேநாளில் உச்சம் தொட்ட மது விற்பனை!

post image

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் வெற்றியால் கர்நாடக மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று ஒரேநாளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை உச்சி முகர்ந்தது.

18 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆர்சிபி கோப்பையை வென்றதால், ரசிகர்கள் ஆரவாரத்தில் திளைத்தனர். பெங்களூரு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட தீபாவளி போலவே கொண்டாட்டப்பட்டது. இதனை கொண்டாடும்விதமாக ரசிகர்கள் பலர் பல்வேறு மதுவகைகளை வாங்கி அருந்தியுள்ளனர்.

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற ஜூன் 3 ஆம் தேதி மட்டும் 1.48 லட்சம் பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் ரூ.30.66 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 36 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டதைவிட இது கணிசமாக உயர்ந்திருக்கிறது.

பீர் வகைகளைத் தவிர்த்து 1.28 கோடி பெட்டிகள் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.127 கோடி கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே நாளில் வெறும் ரூ.19.21 கோடிக்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்தமாக, அந்த ஒரே நாளில் மது விற்பனை மூலம் கர்நாடக மாநில அரசுக்கு ரூ.157.94 கோடி வருவாய் கிட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் நாளில் வசூலான ரூ.25 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.132.24 கோடி அதிகமாகும்.

இதையும் படிக்க | காவல் துறை ஆலோசனையை புறக்கணித்து அவசர கதியில் நடத்தப்பட்டதா வெற்றிப் பேரணி?

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க