செய்திகள் :

3 நாள் சரிவுக்கு பிறகு சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

post image

மும்பை: உலக சந்தைகள் நேர்மறையாக வர்த்தகமான நிலையில் உள்ளூர் சந்தையில் ரியல் எஸ்டேட் தவிர மற்ற அனைத்து துறைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை கொள்முதல் செய்ததன் காரணமாக இந்திய குறியீடுகள் மூன்று நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்ந்து முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 230.17 புள்ளிகள் உயர்ந்து 80,967.68 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70.25 புள்ளிகள் உயர்ந்து 24,612.75 புள்ளிகளாக இருந்தது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 260.74 புள்ளிகள் உயர்ந்து 80,998.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.70 புள்ளிகள் உயர்ந்து 24,620.20 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

சென்செக்ஸில் பாரதி ஏர்டெல், எடர்னல், இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்தன.

நிஃப்டியில் எடர்னல், ஜியோ ஃபைனான்சியல், பாரதி ஏர்டெல், இண்டஸ்இண்ட் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் டிரெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை சரிந்து முடிந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

துறை ரீதியாக, பிஎஸ்இ ரியாலிட்டி குறியீடு 0.7 சதவிகிதம் சரிந்தது, அதே நேரத்தில் தொலைத்தொடர்பு, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை அதிகரித்தன.

என்விடியா மற்றும் பிற சிப்மேக்கர்களில் லாபம் உயர்ந்ததையடுத்து நேற்றை வர்த்தகத்தில் அமெரிக்க பங்கு குறியீடுகள் உயர்ந்தன. அதே வேளையில் கட்டணத் திட்டங்கள் குறித்து மேலும் தெளிவு பெறுவதற்காக பேச்சுவார்த்தைகளுக்காக காத்திருந்தனர்.

தொழில்நுட்ப பங்குகளால் ஆசிய பங்குகள் உயர்ந்தன. அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குகள் சிஏசி மற்றும் டிஏஎக்ஸ் தலா 1 சதவிகிதம் வரை உயர்ந்து வர்த்தகமானது.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், ஆதித்யா பிர்லா ஃபேஷன் & ரீடெய்ல் பங்குகள் 6.2% பங்குகள் பிளாக் டீலில் கைமாறியதால் 10% வரை சரிந்தன. பிளாக் டீலில் 1.4% பங்குகள் கைமாறியதால் அல்கெம் லேபரேட்டரீஸ் பங்குகள் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

நாள்பட்ட தோல் நோய் மருந்து சோதனைகளில் பலன் அளிக்காததால் சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி லிமிடெட் பங்குகள் 20% வரை சரிந்து முடிந்தன.

கார்டன் ரீச், கிளாக்சோ ஸ்மித்க்லைன் பார்மா, ஏபிஎல் அப்பல்லோ, லாயிட்ஸ் மெட்டல்ஸ், எஸ்பிஐ கார்டுகள், அனுபம் ரசாயன், ராடிகோ கைதன், ஹிட்டாச்சி எனர்ஜி, சோலார் இண்டஸ்ட்ரீஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அஸ்ட்ராஜெனெகா பார்மா, பாரதி ஹெக்ஸாகாம், சிசிஎல் தயாரிப்புகள், சிட்டி யூனியன் வங்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச சந்தையில் 52 வார உச்சத்தை பதிவு செய்தன.

ஐபிஓ பட்டியலில், ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பங்குச் சந்தையில் அறிமுகமான பிறகு 5 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

இதையும் படிக்க: சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்!

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சுதா்ஷன் வேணு நிமிக்கப்பட்டுள்ளாா். வரும் ஆக. 25 முதல் இந்த ந... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்த... மேலும் பார்க்க

கடனை ரூ.26,800 கோடியாகக் குறைத்த செயில்

இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்கு நிறுவனமான செயில், தனது கடனை ரு.26,800 கோடியாகக் குறைத்துள்ளது. இது குறித்து அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க