செய்திகள் :

சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

post image

சிக்கிம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் உள்பட பல்வேறு கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்நிலையில், அப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகிய படைகள் ஈடுபட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் குறித்து, இந்திய விமானப் படையின் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

“இந்திய விமானப் படையின் எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் மூலம், சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கியதுடன், தேசிய மீட்புப் படை வீரர்களை அப்பகுதியில் தரையிறக்கி, சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்டுள்ளோம். உயிர்களைக் காப்பாற்றுவதில், இந்திய விமானப் படை தொடர்ந்து உறுதியாகவுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

சிக்கிமில் நிலவும் மோசமான வானிலைக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சிக்கியுள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை இந்திய ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட லாச்சென் கிராமத்தில் சிக்கியுள்ள 113 சுற்றுலாப் பயணிகளை மீட்க, ராணுவ வீரர்கள் புதிய பாதை ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2 நாள்களுக்கு முன்பு லாசங் மற்றும் சங்தாங் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 1,678 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆர். கவாய்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு... மேலும் பார்க்க

பிஜு ஜனதா தளம் முன்னாள் எம்.பி.யுடன் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா திருமணம்

பிஜு ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி.யும் மூத்த வழக்குரைஞரமான பினாகி மிஸ்ராவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் ஜொ்மனியில் திருமணம் செய்துகொண்டனா். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் மக்களவ... மேலும் பார்க்க