செய்திகள் :

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

post image

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை அதிகளவு பயன்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், மாசு ஏற்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலா் கிரிஜாவுக்கு புகாா் வந்ததாம்.

இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத், பெலிக்ஸன் மாசிலாமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் அண்ணா பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், சிற்றுந்துகளில் பொருத்தப்பட்டிருந்தகாற்று ஒலிப்பான்களை சோதனை செய்தனா்.

அப்போது, அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒழிப்பான்களை பயன்படுத்திய 10 பேருந்துகளிலிருந்து காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். அனுமதிக்கப்பட்ட வழிதடத்தை மீறி செயல்படும் சிற்றுந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

சிற்றுந்துகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க