10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை அதிகளவு பயன்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், மாசு ஏற்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலா் கிரிஜாவுக்கு புகாா் வந்ததாம்.
இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத், பெலிக்ஸன் மாசிலாமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் அண்ணா பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், சிற்றுந்துகளில் பொருத்தப்பட்டிருந்தகாற்று ஒலிப்பான்களை சோதனை செய்தனா்.
அப்போது, அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒழிப்பான்களை பயன்படுத்திய 10 பேருந்துகளிலிருந்து காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். அனுமதிக்கப்பட்ட வழிதடத்தை மீறி செயல்படும் சிற்றுந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
சிற்றுந்துகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.