செய்திகள் :

'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜன்

post image

நடிகர் கமல்ஹாசனின் 'தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது' என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

இந்நிலையில், தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) விதித்த தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தாக்கல் செய்த மனு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது.

கமல்ஹாசன் - சிவராஜ்குமார்
கமல்ஹாசன் - சிவராஜ்குமார்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? என கேள்வி எழுப்பி, அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் விவகாரம் முடிந்திருக்கும் எனக் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், " நம்முடைய தன்னலமற்ற ராணுவம் தேசத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள்.

 சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

அன்பு மன்னிப்பு கேட்காது என கூறிவிட்டு, நீண்ட கடிதம் எழுதுவதற்கு பதிலாக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்கு இதில் என்ன ஈகோ? அதற்கு பதிலாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தவறு செய்திருக்கிறார் ” என்று கூறியிருக்கிறார்.

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" - சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததிலிருந்து, பா.ஜ.க அரசைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.அதனால்தான் என்னவோ, ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' - செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட... மேலும் பார்க்க

முதலில் அன்புமணி, அடுத்து குருமூர்த்தி பின் சைதை துரைசாமி - அடுத்தடுத்த தைலாபுர சந்திப்புகள் ஏன்?

பாமகவில் உள்கட்சிப் பூசல் சமீபகாலமாக உச்சத்தை தொட்டிருக்கிறது.கடந்த டிசம்பர் மாதம் நடந்த பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தனை பாமக இளைஞரணித் தலைவராக பாமக நிறுவனர் ராமதாஸ் அறி... மேலும் பார்க்க

Sanskrit இந்திய மொழிகளின் தாய் என்ற Amit shah மீது ஏன் கோபம் வரவில்லை? - Aazhi Senthil Nathan

கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்துதான் பிறந்தது என கமல் ஹாசன் கூறியது சர்ச்சையாகியிருக்கிறது. கமல் அந்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என்கிறார் மொழி சமத்துவத்துக்கான செய்றப்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன். மேலும் பார்க்க

Gaza: ’உலகமே கேட்கும்படி கத்த வேண்டும்!’ - காசா அம்மாக்களின் குரல் கேட்கிறதா உலகத்துக்கு?

காசாவில் நிலவி வரும் போர்ச்சூழலின் காரணமாக, நாட்டில் உணவுப் பஞ்சம் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பதை பல வீடியோக்கள் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால், கர்ப்பிணிகள் உடலில் ஊட்டச்சத்துக் க... மேலும் பார்க்க