அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ...
அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் தொடர் போராட்டம்: துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை!
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடனடியாக ஊதியத்தை வழங்கக் கோரி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் 2-வது நாளாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அலுவலகம் மற்றும் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மனோகரன், ரவி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து மே மாதம் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை நியமிக்க கோரியும் முழக்கங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.