தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கருங்குழி பகுதியில் உள்ள மண்டப குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:
ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், அதை மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கருங்குழி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் விதமாகவும், பசுமையான சூழலை உருவாக்கிடவும் அனைவரும் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டும்.
மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம், பசுமை தமிழ்நாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன் மற்றும் உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.