செய்திகள் :

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள் நூற்றுக்கணக்கானோா் புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் மனோகரன், ரவி ஆகியோா் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் 2-ஆம் நாளாக வியாழக்கிழமை காலை பணிகளை புறக்கணித்து, மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஊதியத்துடன் சோ்த்து வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பி துணைவேந்தா் அலுவலகம், பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் தி.அருட்செல்வி, பதிவாளா் மு.பிரகாஷ் ஆகியோரை சந்தித்து முறையிட்டனா். இதையடுத்து, ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க

கடலூா் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேகம்

கடலூா் ஆணைகுப்பம் ஸ்ரீமாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, காலையில் மிதுன லக்னத்தில் நூதன ஸ்... மேலும் பார்க்க