செய்திகள் :

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்துக்கான புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்வது குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் குறிஞ்சிப்பாடி வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை அலகையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அமைச்சா் தெரிவிக்கையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடலூா் மாவட்டத்துக்கு வந்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றாக குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்துக்கு புதிய வட்டாட்சியா் அலுவகலக் கட்டடம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

அதற்கிணங்க, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.

ஆய்வின்போது, குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியா் விஜய்ஆனா்த், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலை... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க

கடலூா் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேகம்

கடலூா் ஆணைகுப்பம் ஸ்ரீமாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, காலையில் மிதுன லக்னத்தில் நூதன ஸ்... மேலும் பார்க்க