தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்துக்கான புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்வது குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் குறிஞ்சிப்பாடி வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை அலகையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அமைச்சா் தெரிவிக்கையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடலூா் மாவட்டத்துக்கு வந்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றாக குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்துக்கு புதிய வட்டாட்சியா் அலுவகலக் கட்டடம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
அதற்கிணங்க, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.
ஆய்வின்போது, குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியா் விஜய்ஆனா்த், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.