செய்திகள் :

முதலில் அன்புமணி, அடுத்து குருமூர்த்தி பின் சைதை துரைசாமி - அடுத்தடுத்த தைலாபுர சந்திப்புகள் ஏன்?

post image

பாமகவில் உள்கட்சிப் பூசல் சமீபகாலமாக உச்சத்தை தொட்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தனை பாமக இளைஞரணித் தலைவராக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு மேடையிலேயே பாமக தலைவர் அன்புமணி மறுப்பு தெரிவிக்க, அதுவரை உள்கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த பிரச்னை வெட்ட வெளிச்சமானது.

இதையடுத்து, அதே மாதம் அன்புமணி ராமதாஸை சந்தித்தார். இருவருக்கு இடையேயும் சமரசம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

கடந்த மே 10-ம் தேதி நடந்த பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டை முழுவதுமாக அன்புமணி தான் முன் நின்று ஏற்பாடுகளை செய்தார். ஆனால், அந்த மாநாட்டின் மேடையில் ராமதாஸும், அன்புமணியும் நேருக்கு நேர் முகத்தைக் கூட பார்த்துகொள்ளவில்லை.

மே 29-ம் தேதி, முகுந்தன் தனது இளைஞரணித் தலைவர் பதவியின் ராஜினாமா கடிதத்தை அன்புமணியிடம் வழங்கினார். அன்றே செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், 'வளர்த்த கிடா மார்ப்பில் எட்டி உதைத்தது... அன்புமணிக்கு எம்.பி பதவி வாங்கி தந்திருக்கக் கூடாது" என்று ஏகப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கையெடுத்து கும்பிட்டபடி..!

இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்த அன்புமணி தருமபுரியில் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மறைந்த கனல் இராமலிங்கம் படத் திறப்புவிழாக் கூட்டத்தில், 'நானே தலைவர்' என்று சென்னை சோழிங்கநல்லூரில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார்.

இந்த நிலையில், இன்று பாமக நிறுவனர் மற்றும் தனது தந்தையுமான ராமதாஸை சந்திக்க சென்ற அன்புமணி தைலாபுரத்திற்கு சென்றார். இருவருக்கும் இடையே 45 நிமிட பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. பின்னர், எதுவுமே பேசாமல் அன்புமணி கிளம்பி விட்டார். என்ன நடந்தது என அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கார் கண்ணாடியை கூட திறக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி அன்புமணி சென்றார் .

இதனையடுத்து, ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமியும் ராமதாஸை சந்தித்து பேசி வருகின்றனர்.

பாஜக - பாமக கூட்டணியை ராமதாஸ் அவ்வளவாக விரும்பவில்லை. அன்புமணி பாஜக் கூட்டணியை விரும்புகிறார். தற்போது அதிமுகவும் பாஜக வும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமதாஸை சமாதனப்படுத்தி பாமகவை மெகா கூட்டணியில் ஐக்கியப் படுத்தவே பாஜக பக்கம் பேச குருமூர்த்தியும், அதிமுக சார்பில் பேச துரைசாமியும் பேசி வருகின்றனர் என்கிறார்கள்..

'அடுத்து என்ன நடக்கும்?' என்ற பரபரப்பு தற்போது கூடியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் ரேஸ்: முந்தப்போவது யார்? - மல்லுக்கட்டும் மாமன், மச்சான்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர மற்ற ஏழு தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்த நிலையில், திமுக மேலிடம், தொகுதி வாரியாக எ... மேலும் பார்க்க