செய்திகள் :

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" - சசி தரூரின் பதில்

post image

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததிலிருந்து, பா.ஜ.க அரசைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.

அதனால்தான் என்னவோ, ஆபரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு எடுத்துரைக்கும் எம்.பி குழுக்களின் தலைவராக சசி தரூர் நியமிக்கப்பட்டார்.

இந்தக் குழுக்களில் இடம்பெறப் பிற கட்சிகளிடம் எம்.பிக்கள் பெயர் கேட்கப்பட்டபோது, காங்கிரஸ் கொடுத்த எம்.பிக்களின் பெயர் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சசி தரூர்
சசி தரூர்

வெளிநாட்டுப் பயணங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சசி தரூர் புகழ்ந்து வந்தார். இதற்கு அவரது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இது குறித்து தற்போது சசி தரூரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவரது பதில்…

“ஒருவர் தேச நலனுக்காகப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும் போது, இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்று நினைக்கிறேன்.

என்னுடைய நண்பர் சல்மான் குர்ஷித், ‘தேசப்பற்றுடன் இருப்பது இப்போது எவ்வளவு பெரிய கடினமான செயலா?’ என்று கேட்டிருப்பதை நான் பார்த்தேன்.

தேச நலனுக்காக ஒருவர் பாடுபடும்போது, அவரைக் கட்சிக்கு எதிரானவர் என்று யாராவது கருதினால், அவர்கள் அவர்களையே கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டுமே, தவிர, எங்களை அல்ல.

நாங்கள் இப்போது முக்கியமான தகவலை உலகிற்குத் தெரிவித்து வருகிறோம். இந்த நிலையில், ஒருவர் என்ன சொன்னார், என்ன சொல்லவில்லை என்பதை நினைத்துக் கவலைப்பட்டு அதிக நேரத்தைச் செலவிடமாட்டேன்”.

சசி தரூரிடம், ‘நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்வீர்களா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.

இன்னும் நான்கு ஆண்டுகள் எனக்குப் பதவிக் காலம் உண்டு. அதனால், இந்த மாதிரியான எந்தக் கேள்வியும் கேட்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க