செய்திகள் :

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

post image

புது தில்லி: பஞ்சாபில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சண்டீகரில் உள்ள் ஹல்லோ மஜ்ரா பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஹல்லோ மஜ்ரா பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மாயமான அந்தச் சிறுமி, ஜனவரி 21-ஆம் தேதி நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே, உடலில் பல வெட்டுக் காயங்களுடன் ஆடையின்றி குப்பைகளுக்கு மத்தியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியிலுள்ள குற்றவாளியின் வீட்டின் வெளியே அந்தச் சிறுமியின் செருப்பு இருந்தது இந்த வழக்கில் துப்பாக அமைந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பெயிண்டிங் தொழிலாளியான ஹீரா லால் குட்டு தலைமறைவானதைத் தொடர்ந்து அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஏழு நாள்களுக்குப் பின், பிகாரில் பதுங்கியிருந்த ஹீரா லால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியை பூர்வீகமாகக் கொண்ட ஹீரா லால் குட்டுவுக்கு இரு மனைவிகளும் 5 குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அவரது மூத்த மகளுக்கு வயது 13.

இதனைத்தொடர்ந்து குற்றவாளி மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் இன்று(ஜூன் 3) சண்டீகர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற ஹீரா லால் குட்டு குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ம.பி.யில் கரோனா பாதிப்பு: இந்தூரில் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க

கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்: முர்மு

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

தில்லி இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க