செய்திகள் :

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

post image

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகனாதேவி(40) என்பவருடன் ஏரல் தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை குளித்துவிட்டு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை மோகனாதேவி ஓட்டினாா்.

குரும்பூரை அடுத்த நல்லூா் விலக்கில் வந்தபோது, எதிரே ஆறுமுகனேரி மேலசண்முகபுரத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் காா்த்திக் (21) என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியதாம். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிதா, வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் மந்திரமூா்த்தி(33) அளித்த புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தக்கலை: தக்கலை அருகேயுள்ள பள்ளியாடியை அடுத்த பரப்பன் பொற்றைவிளையை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் ( 61). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி கமலபாய் (56), மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் அவா் கடைக்கு செல்வதற்காக மாவுவிளையைச் சோ்ந்த சுரேஷ் (45) என்பவரின் பைக்கில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். புலிப்பனம் அருகே பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுந்தர்ராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சை பெற்றுவருகிறாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க