செய்திகள் :

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வரலாற்று சாதனை!

post image

இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல் சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தில் இந்தியாவின் முதல் 33.33 மீ நீளமுள்ள யு-கிர்டர் வழித்தடம் 5-ல் நிறுவப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் முதல் 33.33 மீ நீளமுள்ள யு-கிர்டர் சென்னை மெட்ரோ ரயில் கட்டம் II-ல் வழித்தடம் 5-ல் ராமாபுரத்தில் நிறுவப்பட்டது. இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனை மற்றும் இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வு.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள், ஏஇஓஎன்(AEON) மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் எல்&டியுடன் இணைந்து நாட்டின் முதல் 33.33 மீட்டர் நீளமுள்ள யு-கிர்டரை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த மைல்கல் பொறியியல் சாதனை, இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த யு-கிர்டர், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கிய சான்றாகவும் உள்ளது.

பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் யு-டர்ன் பகுதிகளில், எதிர்கால போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு நீளமான ஸ்டீல் கர்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், எல்&டி தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான யு-கிர்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான யு-கிர்டர் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது .

இந்த முயற்சியின் முக்கிய சவால்கள் யு-கிர்டர்க்காண அச்சுகள் வடிவமைத்தல், அவை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல் மற்றும் துல்லியமாக நிறுவுவது ஆகியவையாகும்.

இந்தப் பணி மூன்று ஸ்பான்களிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது, ஒவ்வொரு ஸ்பானிலும் இரண்டு கிர்டர்கள் நிறுவப்பட்டன. மொத்தமாக 33.33 மீட்டர் நீளமுள்ள 6 யு-கிர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்த யு-கிர்டர்கள் உருவாக்கும் செயல்முறை சிக்கலான கம்பி கட்டமைப்பு (reinforcement), முன் இழுவை முறை (pre-tensioning), மற்றும் மிக உயர்ந்த தரக் கட்டுப்பாட்டு நிலைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த கிர்டர்கள் காஸ்டிங் யார்டிலிருந்து நிறுவும் இடத்துக்குக் கொண்டு செல்லும் பணிக்கு, மிகச் சீரான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது.

இந்த யு-கிர்டர், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 6+6 அச்சுகளைக் கொண்ட மல்டி-ஆக்சில்டி ரெய்லர்களை பயன்படுத்தி, Volvo FH 520 HP வாகனம் மூலம் இடமாற்றப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், கூடுதல் பொதுமேலாளர் சி.முரளி மனோகரன் (உயர்மட்ட கட்டுமானம்), துணை பொது மேலாளர் ஏ.ராமகிருஷ்ணன் (கட்டுமானம்), கே.பவானி - EVP & IC தலைவர்/ஹெவி சிவில் இன்ஃப்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!!

எஸ்பிபி பிறந்தநாள்: நினைவிடத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த் தொற... மேலும் பார்க்க

துணைவேந்தர்கள் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

நமது சிறப்பு நிருபர்தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் படிப்பில் மாணவா் சோ்க்கை விவரங்களை உறுதி செய்ய அறிவுறுத்தல்

நிகழ் கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி இணையதளத்தில் அதிகாரபூா்வமாக பதிவேற்றப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்... மேலும் பார்க்க

தமிழறிஞா் தாயம்மாளுக்கு கலைஞா் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழறிஞா் தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் செம்மொழி தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்க... மேலும் பார்க்க

நீட் தோ்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

நீட் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பி... மேலும் பார்க்க

பல்கலைக் கழகங்களின் நிதிப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பல்கலைக்கழகங்களில் நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமி: துணை வேந்தா் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால்,... மேலும் பார்க்க