செய்திகள் :

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்; 275 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகா கும்பாபிஷேகம்..!

post image

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தை தலைமையகமாகக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் செயல்பட்டபோது திருவட்டார் ஆதிகேச பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

இதற்கிடையே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கள் குலதெய்வமான ஸ்ரீபத்மநாபசுவாமி-க்கு திருவனந்தபுரத்தில் கோயில் அமைத்தனர்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலின் வடிவத்திலேயே திருவனந்தபுரத்தில்  பத்மநாசுவாமி கோயில் அமைக்கப்பட்டது. திருவட்டாறு கோயில் மூலவரான ஆதிகேசவ பெருமாள் 16008 சாளக்கிராமங்களைக் கொண்டு 41 மூலிகைகளின் கலவையிலான கடுசர்க்கரை யோகம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவட்டாறு கோயிலில் 22 அடி நீளத்தில் அனந்த சயனராக மூலவர் காட்சி அருளுகிறார்.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்

கோர்ட் வழிகாட்டுதல் படி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளை திறந்து பார்த்தபோது விலை மதிப்பெற்ற நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை அடுத்து கோயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி உலக பிரசித்திபெற்றார். இதையடுத்து கோயில் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் கோர்ட் வழிகாட்டுதல் படியே நடைபெற்று வருகின்றன.

சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயில் திருப்பணிகள் தாமதமானது. 2021 முதல் பல கட்டங்களாக புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. இப்போது திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக கோயில் மேலாளர் ஸ்ரீகுமார் அறிவித்துள்ளார்.

கோயில் கருவறை மீது அமைக்கப்பட்டுள்ள மூன்று கும்பங்கள், ஒற்றக்கல் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கும்பம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 8-ம் தேதி நடக்கிறது

1750-ம் ஆண்டு மார்த்தாண்டவர்மா மகாராஜா ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பிறகு 275 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8-ம் தேதி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

கடந்த 2-ம் தேதி முதல் சுத்தி பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூன் 8-ம் தேதி காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் தொடங்கும். அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

275 ஆண்டுகளுக்குப்பிறகு ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உங்களின் எந்த பிரச்னையையும் 48 நாளில் தீர்க்கும் நிகும்பலா ஹோமம் - உடனே சங்கல்பம் செய்யுங்கள்!

உங்களின் எந்த பிரச்னையையும் 48 நாளில் தீர்க்கும் நிகும்பலா ஹோமம்! உடனே சங்கல்பம் செய்யுங்கள்! ஆனி அமாவாசை நாளில் (24-6-2025) சக்தி விகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா ஹோமம... மேலும் பார்க்க

'இதுதான் விதியா...' - விமான கோளாறால் இளைஞருக்கு சாதகமான 'ஹஜ்' பயணம்!

புனித நகரமான மெக்காவுக்கு வழக்கம்போல பயணம் செய்த லிபியாவைச் சேர்ந்த யாத்ரீகருக்கு ஏற்பட்ட தடைகள், அவற்றைத் தாண்டிய அவரது விடாப்பிடியான உறுதியும் நம்பிக்கையும் உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.... மேலும் பார்க்க

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு, 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்புப் பூஜையும் நடை... மேலும் பார்க்க

சபரிமலை: ஐயப்ப சுவாமி கோயில் வைகாசி மாத பூஜைகள்; பக்தர்கள் தரிசனம் | Photo Album

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் வைகாசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுப் படி பூஜை, களபம் எழுந்தருளல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சபரிமலையில் பங்குனி உத்திர ஆறா... மேலும் பார்க்க

பாதி நுழைவுவாயில் இந்து கோயிலுக்கு; பாதி பள்ளிவாசலுக்கு... கேரளாவின் ஆச்சர்ய கிராமம் மேலேகுற்றிமூடு!

அரசியல் கட்சிகள், அமைப்புகள் ரீதியாக பின்னிப்பிணைந்தவர்கள் கேரள மக்கள். அரசியல் ரீதியாக பல மோதல்கள் நடைபெற்றாலும் மத நல்லிணக்கத்துக்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றனர். தி கேரளா ஸ்டோரி என்ற சினிம... மேலும் பார்க்க