செய்திகள் :

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?

post image

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு, 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்புப் பூஜையும் நடைபெற உள்ளது. பதிவு செய்யுங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மிருத்யுஞ்ஜய ஹோமம்

ம்ருத்யு என்றால் யமன். ஈசன் மார்க்கண்டேயனைக் காக்க யமனை வென்றதால், அவரே மிருத்யுஞ்ஜயர் என்றானார். அப்போது ஈசனைத் துதித்து மார்க்கண்டேயர் பாடியதே மஹாமிருத்யுஞ்சய மந்திரம். உயிருக்குக் கவசமாக நிற்கும் இந்த மந்திரத்தால் சிவனைக் குறித்துச் செய்யப்படுவதே மிருத்யுஞ்ஜய ஹோமம்.

மஹாமிருத்யுஞ்ஜய மந்திரம், மிருத சஞ்ஜீவனி ஸூக்தம், இந்திராக்ஷீ சிவகவசம் உள்ளிட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களால் செய்யப்படும் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் ஈசனின் பரிபூரண கடாட்சத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டால் ஆயுள் கூடும்; ஆரோக்கியம் நிலைக்கும்; மரண பயம் அகலும். தரித்திரம் பீடை விலகும். இந்த ஹோமத்திலிருந்து வெளியாகும் தெய்வீகக் சக்திகள், சங்கல்பம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தைக் காக்கும்.

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்

உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும் அன்பர்களுக்கும் இந்த ஹோமத்தால் உடல்நலம் மேம்பட்டு, நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்கிறார்கள். மேலும் இந்த ஹோமம் அகால மரணத்தைத் தடுக்கும்; விபத்துக்களில் இருந்து காக்கும்; எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும். கண் திரிஷ்டி, தீய செய்வினைகள் யாவும் விலக செய்யும். இதனால் ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சிறப்பு மிக்க மஹாமிருத்யுஞ்சய ஹோமம் சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள மேலக்கோட்டையூரில் உள்ள ஸ்ரீமேகாம்பிகை சமேத ஸ்ரீமேகநாதர் ஆலயத்தில் மாதம்தோறும் அமாவாசை நாளில் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே சக்தி விகடன் வாசகர்கள் நலமும் வளமும் பெற இந்த சிறப்பு ஹோமத்தை இந்த ஆலயத்தில் நடத்த உள்ளோம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம். இது ராவணன் வழிபட்ட மேற்கு நோக்கிய ஆலயம். அம்பிகை மேகாம்பிகை பிள்ளை வரம் தரும் தயாபரி என்கிறார்கள். இது வருணன் வழிபட்ட சிறப்பு பரிகாரத் தலம். இங்கு மேகநாதன் வழிபட்டு மிருத்யுஞ்சய ஹோமம் செய்ததால் சுவாமியும் மேகநாதர் என்ற திருநாமம் கொண்டார். ஆயுள் அதிகரிக்கும் சிறப்பான தலமிது. இங்கு மட்டுமே வாசுகி நர்த்தனர் எனும் சிறப்பு வடிவில் ஈசன், வாசுகி பாம்பின் மீது ஆடும் திருக்கோலம் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் ஆரோக்கியம் கூடும் என்பது அனைவரின் நம்பிக்கை. இங்கு பிரதோஷ நாள்களில் 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்

இந்த மகிமை நிறைந்த தலத்தில் வரும் 26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்! 12 ராசிக்கும் தனித்தனியாக சிறப்பு வழிபாடுகள் செய்து பூஜைகளும் நடைபெறும் என்பதும் சிறப்பு. மேலும் உங்கள் குடும்பத்தினரும் எல்லாவிதமான பாதிப்பிலிருந்தும் காக்கப்படுகிறார்கள்.

QR CODE FOR MAHAMIRUTHYUNJAYA HOMAM:

qr code for miruthyunjaya homam

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி, விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

சபரிமலை: ஐயப்ப சுவாமி கோயில் வைகாசி மாத பூஜைகள்; பக்தர்கள் தரிசனம் | Photo Album

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் வைகாசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுப் படி பூஜை, களபம் எழுந்தருளல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சபரிமலையில் பங்குனி உத்திர ஆறா... மேலும் பார்க்க

பாதி நுழைவுவாயில் இந்து கோயிலுக்கு; பாதி பள்ளிவாசலுக்கு... கேரளாவின் ஆச்சர்ய கிராமம் மேலேகுற்றிமூடு!

அரசியல் கட்சிகள், அமைப்புகள் ரீதியாக பின்னிப்பிணைந்தவர்கள் கேரள மக்கள். அரசியல் ரீதியாக பல மோதல்கள் நடைபெற்றாலும் மத நல்லிணக்கத்துக்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றனர். தி கேரளா ஸ்டோரி என்ற சினிம... மேலும் பார்க்க

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு; பதிவு செய்யுங்கள்!

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு! பதிவு செய்யுங்கள்! 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சி... மேலும் பார்க்க

சித்ரா பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை வரும் பக்தர்கள் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது?

நாளை ஞாயிற்றுக்கிழமை (11-5-2025) சித்ரா பௌர்ணமி. இந்த நன்னாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனும் பேறும் கிடைக்கும் என்கிறது தலவரலாறு. எனவே, நாளை இரவு 8.53 மணி ம... மேலும் பார்க்க

பள்ளிவாசல் முன்பு பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர்! - வரவேற்ற இஸ்லாமியர்கள்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.சாமி வேடமிட்ட குழந்தைகளுக்கு குளிர்பானம் அளிக்கும் இஸ்லா... மேலும் பார்க்க