பறக்கும் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: தெற்கு...
உங்களின் எந்த பிரச்னையையும் 48 நாளில் தீர்க்கும் நிகும்பலா ஹோமம் - உடனே சங்கல்பம் செய்யுங்கள்!
உங்களின் எந்த பிரச்னையையும் 48 நாளில் தீர்க்கும் நிகும்பலா ஹோமம்! உடனே சங்கல்பம் செய்யுங்கள்! ஆனி அமாவாசை நாளில் (24-6-2025) சக்தி விகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா ஹோமம் நடத்தவுள்ளோம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
சக்தி வடிவங்களில் வேக வடிவம் கொண்டவள் அன்னை பத்ரகாளி. தீமைகளை அழிக்கவென்றே தோன்றிய மகாசக்தி. இவளை அதர்வண வேதம் பலவாறாகப் போற்றுகிறது. மகாகாளியின் அம்சமாக பல்வேறு தேவியர் பகை முடிக்க அவதரித்தனர். அதில் நிகும்பலா எனும் பிரத்யங்கிராவும் தனிச் சிறப்பான தேவி. பிரகலாதனுக்காக திருமால் நரசிம்மர் அவதாரம் எடுத்து வந்து ஹிரண்யகசிபுவை கொன்றார்.
தீயவனின் ரத்தம் பருகியதால் நரசிம்மரின் உக்ரம் தணியாததால் தேவர்கள் சிவனை சரண் அடைந்தனர். உடனே ஈசன் பிரமாண்ட சரபர் வடிவம் எடுத்தார். அவரது இரு சிறகிலும் அன்னை காளியின் அம்சமான சூலினி மற்றும் பிரத்யங்கிரா தேவி அடங்கி சரபருக்கு வலிமை கொடுத்தனர் என்பது புராணத் தகவல். அப்போது பிரத்யங்கிரா தேவி ஆயிரம் சிங்க முகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் வெளிப்பட்டாள். நரசிம்மரை ஆலிங்கனம் செய்து சாந்தப்படுத்திய சரபர், தேவி சூலினி, தேவி பிரத்யங்கிராவை தீமைகளை அழிக்கவென்றே பூமியில் நிலைத்திருக்கச் செய்தார்.
பூமியில் தீமைகளை ஒடுக்கவும் நன்மைகளைக் காக்கவும் தேவி நிகும்பலா எனும் பிரத்யங்கரா சில புண்ணிய தலங்களை தேர்ந்தெடுத்து அதில் விசேஷமான பூஜைகளையும் ஹோமங்களையும் நடத்த தமது யோகினிகளுக்கு உத்தரவிட்டாள். அந்த வகையில் கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஸ்ரீவீரபத்திரர் உடனுறை பத்ரகாளி கோயிலில் 64 கோடி யோகினிகள் கூடி தேவியை வழிபட்டார்கள் என இந்த ஆலய தலவரலாறு கூறுகிறது.
தக்கயாக பரணியில் தம்மை புகழ்ந்து பாடிய கவி ராட்சசர் ஒட்டக்கூத்தருக்கு தேவி பத்ரகாளி பிரத்யட்சயமாக காட்சி தந்த இடம் இந்த கோயில். தட்சனை அழித்த திருக்கோலத்தை புகழ்ந்து பாடியதால் சிவாம்சமான வீரபத்திரரும் இங்கே ஒட்டக்கூத்தருக்கு காட்சி தந்தாராம். தம்மை பாடிய பக்தருக்காக காளியும் வீரபத்திரரும் மனமகிழ்ந்து காட்சி தந்ததால் இங்கே இருவரும் சிரித்த கோலத்தில் காட்சி தருகிறார்கள் என்பது விசேஷம்.

ஒட்டக்கூத்தர், ரவண சித்தர் ஜீவசமாதிகள் இங்குள்ளன. அக்கமகாதேவியார் இங்கே சில காலம் தங்கி இருந்து நிஷ்டையில் ஆழ்ந்து இருந்ததாகவும் அவருக்கு ஈசன் இங்கே யோக நிலைகளை அருளியதாகவும் கூறப்படுகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆனி அமாவாசை நாளில் (24-6-2025) சக்தி விகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா யாகம் நடத்தவுள்ளோம். அமாவாசை இரவில் நடைபெறும் நிகும்பலா ஹோமத்தில் கலந்து கொண்டால் உங்களை சூழ்ந்திருக்கும் துன்பங்கள் எல்லாம் காணாமல் போய் விடும் என்பது உறுதி.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
அதர்வண வேதத்தின் நாயகி காளிக்கான அமாவாசை பூஜையை நள்ளிரவில் செய்தால் உங்களை வாட்டும் துன்பங்கள் காணாமல் ஓடி விடும் என்பது நம்பிக்கை. அமாவாசை இரவுகளில் நடைபெறும் நிகும்பலா ஹோமம் உக்கிரம் பெற பெற சிரித்தபடி காட்சி தரும் தாராசுரம் காளியின் திருமுகம் சிவந்து உக்கிரமாவதை இப்போதும் காணலாம் என்பது அதிசயம். மிளகாயின் உக்கிரத்தை தான் தாங்கி, சுற்றி இருப்பவர் ஒருவருக்கும் ஒரு சிறிய நெடி கூட வராமல் பார்த்துக் கொள்பவள் இந்த உக்கிர தேவி. எனவே தான் இந்த கோயிலில் இந்த ஹோமத்தை நடத்த விரும்பினோம்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மனநிம்மதி கிடைக்கும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். உத்தியோக உயர்வு-புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், வியாபாரம், தொழில் சிறக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும், தீய பழக்கங்கள் ஒழியும். கெட்டவர் சகவாசம் நீங்கும். திருமணம்-பிள்ளைப்பேறு போன்ற மங்கல விஷயங்கள் வாய்க்கும். எந்தவித எதிர்மறை எண்ணங்களும் உங்களைத் தாக்காது. செய்வினை-சித்து போன்ற அற்ப விஷயங்கள் உங்களை பாதிக்காது. எனவே எத்தனை துன்பம் வந்தாலும் கலங்காதீர்கள். நம்பிக்கையோடு இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். இங்கு தரப்படும் ரட்சையும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்கள் பிரச்னை யாவும் தீரும் அதிசயம் காண்பீர்கள்.
NIGUMBALA HOMAM QR CODE FOR REGISTRATION

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பஸ்பம், குங்குமம் மற்றும் விசேஷ ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan