செய்திகள் :

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

post image

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2025-ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன்வைத்துள்ளது. நெகிழி மாசுபாட்டுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தை மீண்டும் உயிா்ப்பிக்கும் வகையில் வரும் ஆகஸ்டில் ஐநா நெகிழி ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள் ஜெனீவாவில் தொடங்குகின்றன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிகழாண்டின் சுற்றுச்சூழல் நாள் முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. உலகை காக்க நெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டியது இன்றியமையாத தேவை ஆகும்.

உலகளாவிய, முழுமையான நெகிழி ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் அவை உடனடியாக உருவாக்க வேண்டும். குறிப்பாக, ஐநா நெகிழி ஒப்பந்தம் உலக நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்த வேண்டும். நெகிழி உற்பத்தி முதல் கடலில் கலக்கும் மாசு வரை, முழு வாழ்க்கை சுழற்சியை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை வெளிப்படையாக உறுதி செய்யும் வழிகள் இருக்க வேண்டும். ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான பன்னாட்டு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு முழுமையான பிளாஸ்டிக் ஒப்பந்தத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும்.

நெகிழி மாசுபாட்டை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி தடைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.

கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாகக் கூறி, நெகிழி குப்பையை எரிக்கும் எரிஉலை திட்டத்தை ரூ. 1,026 கோடியில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான திட்டம் ஆகும்.

காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்பமடைய காரணமான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... மேலும் பார்க்க

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ப... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க